மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கொடி பிடித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் கர்பாவில் நடைபெற்ற பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, குஜராத் மாநிலம் உள்கட்டமைப்பிலும், மின்சார வசதியிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஏன் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறிய அத்வானி, குஜராத்தின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்று கூறினார்.
Posted in: செய்திகள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook


18:13
ram