.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மென்பொருள்-தந்திரங்கள். Show all posts
Showing posts with label மென்பொருள்-தந்திரங்கள். Show all posts

Wednesday 8 October 2014

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!




Cloud-Convert


மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம்.


இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம்.




இது போன்ற நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட வடிவிலான அந்த கோப்பை பொருத்தமான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்னும் எளிமையான இணைய நடைமுறையை நீங்களும் கற்று கொண்டிருக்கலாம்.


இதற்கு தேவையான மென்பொருள்களும் இணையத்தில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.



மென்பொருள் கூட தேவையில்லை, கோப்புகளை மாற்றித்தரும் இணையதளங்களும் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம்.




கிளவுகன்வர்ட்.ஆர்ஜி தளமும் இதே வகையான சேவையை வழங்குகிறது.பெரும்பாலான கோப்பு மாற்று சேவை போல இந்த தளத்திலும் எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை. மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் போதுமானது.கிளவுட் முறையில் செயல்படும் சேவை இது.


இப்படி 148 வகையான கோப்புகளை இந்த சேவை விரும்பிய கோப்பு வடிவில் மாற்றித்தருகிறது. எந்த வகையான கோப்புகளை எல்லாம் மாற்ற முடியும் என்பதற்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுவாக இல்லாமல் , எந்த எந்த பிரிவில் என்ன வகையான கோப்புகளை மாற்றலாம் என அழகாக துணைத்ததலைப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒலி கோப்பு என்றால் எம்பி3 , எம்4ஏ, எ.எ.சி என வரிசையாக ஒரு சின்ன பட்டியல் வருகிறது.



கோப்புகளை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது கூகுல் டிரைவி இருந்தோ பதிவேற்றலாம். மாற்ற வேண்டிய கோப்பு எந்த வடிவில் ,எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் வசதி இருக்கிறது. மாறிய் கோப்பை இமெயில் பெறலாம். அல்லது கூகுல் டிரைவில் வந்து உட்கார செய்யலாம்.டிராப் பாக்சிலும் தான்.



ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் .எனவே மெயிலில் பார்க்க முடியாத கோப்பு வந்தால் இந்த சேவை மூலம் மாற்றி கம்ப்யூட்டரில் பார்த்து கொள்ளலாம்.



சாதாரண பயனாளிகள் நாள் ஒன்றுக்கு 5 கோப்பு வரை மாற்றிகொள்ளலாம். பதிவு செய்து உறுப்பினரானால் கூடுதல் வசதி உண்டு.


பதிவேற்றப்படும் எந்த கோப்பையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதிமொழி தருகிறது.இணைய கண்காணிப்பு யுகத்தில் இது மிகவும் முக்கியம்.


இணைய முகவரி:     https://cloudconvert.org/

Sunday 19 January 2014

டி.வியுடன் கம்பியூட்டரை இணைப்பது எப்படி?

30-1380517293-2copy 
 
இன்றைய காலத்தில் தொழில் நுட்பம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது எனலாம், மேலும் தினந்தோறும் அதில் பல மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருகிகுறது. இன்றைக்கு டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம். கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம். இதன் மூலம் நீங்களும் உங்கள் டி.வியை கம்பியூட்டருடன் இணைத்து கண்டு மகிழுங்கள்….
 30-1380517236-1copy 
எச்.டி.எம்.ஐ. (HDMI) புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

30-1380517293-2copy 
டி.வி.ஐ. (DVI) இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

30-1380517320-3copy 
வி.ஜி.ஏ. (VGA) இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
30-1380517343-4copy 
எஸ்-வீடியோ (Svideo) இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

30-1380517382-6copy 


எஸ்-வீடியோ (Svideo) ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.
30-1380517402-5copy 
எஸ்-வீடியோ (Svideo) ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.
30-1380517434-7copy


எஸ்-வீடியோ (Svideo) இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

Sunday 5 January 2014

நண்பர்கள் ரியாக்‌ஷனை பார்த்து ரசிக்க ஒரு செயலி..



விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ? சொல்லுங்கள். ஆரம்பத்தில் இமெயில் வாயிலாக, அப்புறம் பேஸ்புக் வாயிலாக என்று , யாம் பெற்ற சிரிப்பு நண்பர்களும் பெறட்டும் என , நகைச்சுவை படங்களை அனுப்பி வைப்பது இயல்பாக தான் இருக்கிறது. இப்போது , இதற்காக என்றே ஒரு செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது.

கிகில் மெயில் எனும் அந்த செயலி சிரிக்க வைக்கும் படங்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்க உதவுகிறது. இது என்ன புது விஷயமா ? புகைப்பட புகழ் செயலி ஸ்னேப்சேட் இதை தானே செய்கிறது என்று கேட்கலாம். இன்னும் கூட பல செயலிகள் செல்வழி புகைப்படங்களை பகிர வைக்கின்றனவே என்று செயலிகள் விஷயத்தில் அப்டட்டாக இருப்பவர்கள் கேட்கலாம்.

சரி தான், புகைப்பட பகிர்வுக்கு செய்லிகள் இல்லாமல் இல்லை. ஆனால் கிகிலி மெயில் செயலி , ஸ்னேப்சேட்டை விட ஒரு படி மேலே சென்று அசத்துகிறது. எப்படி தெரியுமா?  ஸ்னேப்சேட் போன்றவை புகைப்படங்களை எடுத்து அனுப்ப மட்டும் தானே செய்கின்றன ? கிகில் மெயில் இப்படி அனுப்பிய புகைப்படத்தை பார்த்ததும் நண்பர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்கின்றன்றோ அதை பார்த்து ரசிக்க உதவுகிறது.

சிரிப்பு புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்வதே, என்னைப்போல நீங்களும் சிரியுங்கள் என்று சொல்வது தானே. அப்படி இருக்க, சிரிப்பு படத்தை பார்த்த்தும் நண்பர்கள் எப்படி உணர்ந்தனர் என்று தெரிந்து கொண்டால் தான் அந்த பகிர்வு முழுமையாகும். ஆனால் எங்கோ இருக்கும் நண்பர்கள் ரியாக்‌ஷனை எப்படி தெரிந்து கொள்வது? இதை தான் கிகில் மெயில் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் , புகைப்பட அல்லது வீடியோவை அனுப்பியதுமே , அவர்கள் போனில் புதிய  மெயிலுக்கான தகவல் போய் சேரும் . அந்த மெயிலை கிளிக் செய்து பார்த்ததுமே நண்பர்கள் ரியாக்‌ஷன் என்னவோ அது அப்படியே புகைப்படமாக கிளிக் ஆகி, பதில் மெயிலாக வந்தடையும். ஆக, நண்பர்கள் நகைச்சுவை காட்சியை பார்த்து , எப்படி ரசித்து மகிழ்கின்றனர் என்று இந்த செயலி வழியே உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் சுவாரஸ்ய்மான செயலி தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இதில் எத்தனை விதமான ரியாக்‌ஷ்ன்களை எல்லாம் பார்க்க கூடும் என்பதை . சில வீடியோக்களை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். சிலர் சிரித்து கொண்டே இருக்கலாம். இன்னும் சில படங்களை பார்த்து யாரேனும் , உம்மனா மூஞ்சியாக முகத்தை வைத்துக்கொள்ளலாம். சிரிப்பு படத்துக்கான இந்த ரியாகஷனே கூட சிரிக்க வைக்கலாம் தானே.

செயலி முகவரி:  http://www.gigglemail.com/#

Saturday 4 January 2014

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!




ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.

நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.

நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.

ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.

இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

Tuesday 10 December 2013

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?




நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.


Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும்


 சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்


1.முதலில் இங்கு சென்று Virtual Router http://virtualrouter.codeplex.com/  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.


2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்


 அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்


3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

Sunday 8 December 2013

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?




தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

Tuesday 26 November 2013

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க!

 

ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்                       *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு:


இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

Tuesday 12 November 2013

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.



சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


"x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை



என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது!

 நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது

do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.


idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.

http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.

கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போல.

Tuesday 5 November 2013

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது Google!


HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.



Thursday 31 October 2013

usb மூலம் உங்கள் கணணியை லாக் செய்ய

PenDriverGrande1

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதையே சாவியாக பயன்படுத்த முடியும்.


இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.
மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?


இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.


3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.


4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.


5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)


6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.


7. இறுதியாக கிரியேட் கீ — Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.


அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.


30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும். இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும். இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்.


இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.
ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.



முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…!

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட!

1330711326_microsoft_excel_2010_109374233

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.
இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்.


மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்!

10-1381383739-09-1381310659-procamera
 
நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. 
 
 
இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம். 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன் வின்டோஸ் 8 ஓஎஸ் 1.5 GHz டியுல் கோர் பிராசஸர் 41 மெகாபிக்சல் கேமரா 1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 2ஜிபி ராம்(RAM) 32ஜிபி மெமரி 7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் 3ஜி,4ஜி wi-fi 158 கிராம் 10.4mm 2000mAh பேட்டரி டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது, இதன் கேமராவின் சிறப்பு என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
 
 10-1381384330-25-1380109961-4copy

நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.
 
 
10-1381384251-25-1380109932-2copy 
 
 
நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.
 
 
10-1381383995-09-1381311077-nokialumia1020-5 
 
 
நோக்கியா லூமியா 1020 இருட்டில் எடுக்கப்பட்ட போட்டோவில் நீங்கள் பிரைட்னஸ்யை கூட்டினால் எவ்வளவு வெளிச்சமாக தெளிவாக தெரிகிறது என்பதை பாருங்கள்.

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

10-mo 
 
இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள். இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.


 இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.


மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும். திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.


 போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

Tuesday 29 October 2013

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.


இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.


ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு தளங்களுக்குள் நுழைந்துவிடும் கில்லாடிக்கு கில்லாடிகளும் இருக்கவே செய்கின்ற‌னர்.


கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிபுணர்களும் புதிய பாதுகாப்பு வழிகளை உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.


பொதுவாக இத்தகைய சாப்ட்வேர்களும் பாதுகாப்பு வழிகளும் ஹைடெக்காக இருக்குமே தவிர சுவாரஸ்யமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஒரு பயர்வால் செயல்ப‌டும் விதம் பற்றி அறிய யாருக்கு ஆட்வம் இருக்கும் சொல்லுங்கள்.


 ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பாதுகாப்பிற்கான புதிய சாப்ட்வேர் கொஞ்ச‌ம சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.அந்த சாப்ட்வேர் செயல்படும் விதம் அட என வியக்க வைத்து புன்னகைக்கவும் வைக்கிறது.


 பொதுவாக் எல்லா பாதுகாப்பு சாப்ட்வேர்களும் கம்ப்யூட்டர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்துவதில் கவன்ம் செலுத்துகின்றன என்றால் மைகோனோஸ் என்னும் இந்த புதிய சாப்ட்வேர் கம்ப்யூட்டர் திருடர்களையும் கொள்ளயர்களையும் உள்ளே அழைத்து அதன் பிறகு அவர்களுக்கு போக்கு காட்டி வெறுப்பேற்றி களைப்படைய வைத்து விட்டால் போதும் என புற முதுகிட்டு ஓட வைக்கிறது.


மற்ற சாப்ட்வேர்கள் பூட்டு போல செயல்ப‌டுகின்றன என்றால் இந்த சாப்ட்வேரோ இல்லாத ஒரு கதவை உருவாக்கி அதன் வழியே கம்ப்யூட்டர் திருடர்களை நுழைய வைத்து அவ‌ர்களுக்கு தவறான தகவல்களாக அள்ளிக்கொடுத்து குழப்பி விடுகிறது.


மைகோனோஸ் சாப்ட்வேர் இதனை செய்யும் விதம் கச்சிதமானது.ஒரு விழிபான காவலாளி போல இது திருடர்கள் யாரேனும் அத்துமீறி நுழைய முயல்கின்றனரா என்பதை சரியான நேரத்தில் கண்டு பிடித்து உஷாராகி விடுகிற‌து.


அனால் அதன் பிறகு அவசரப்படாமல் திருடனோடு மல்லுக்கட்ட தயாராகிறது.உடனே அது பொய்யான பாஸ்வேர்டுகளை எடுத்து சம‌ர்பிக்கிறது.மேலும் திருட்டு ஆசாமி தளத்திற்குள் முன்னேறி செல்வது போன்ற உண‌ர்வை ஏற்படுத்தி அங்கும் இங்கும் அல்லாட‌ அவைக்கிறது.
வழக்கமாக ஒரு மணியில் முடிய வேண்டிய வேலையை பல மணி நேரத்திற்கு இழுத்தடிக்கிறது.அதன் பிறகு பார்த்தால எல்லாம் போலியான தகவல்கள் என்ற உண்மை திருடனை வெறுப்பேற்றும்.


இப்படி திருட வந்த கில்லாடியின் உழைப்பை விரையமாக்கி இந்த சாப்ட்வேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.திருடனும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் வேறு தளம் பார்க்க சென்று விடுவார்.அதற்குள் ஊடுருவ முயன்ற ஆசாமியின் அடையாளத்தை அறிய உதவக்கூடிய தகவல்களை இந்த சாப்ட்வேர் சேகரித்து விடும்.


கம்ப்யூட்டர் திருடர்களை தடுக்க எவ்வளவு தான் பாதுகாப்பான‌ வ‌ழியை உருவாக்கினாலும் அதனை உடைக்ககூடிய வழியை கண்டுபிடித்து விடும் நிலை இருப்பதால் இந்த புதுமையான சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மைகோனோஸ் நிறுவன தலைவர் டேவிட் கோயர்ட்ஸ்.


இந்த சாப்ட்வேர் கப்ம்யூட்டர் திருடர்களின் முயற்சியை வீண‌டித்து அந்த செயலுக்கான பயனையே கேள்விக்குள்ளாக்கி விடுவதாகவும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.


சாப்ட்வேரும் கூட சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்கிறார்.


Monday 28 October 2013

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.


இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன.


தீய நோக்கம் கொண்ட சாப்ட்வேர்களே மால்வேர் என்று இணைய உலகில் இகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகின்றன.விஷமத்தனமான வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் நுழைப்பது,பாஸ்வேர்டு திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவது, பயனாளிகளின் இணைய நடவடிக்களைகளை உளவு பார்ப்பது, கிரிடிட் கார்ட் பயன்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது என பல்வேறு இணைய குற்றங்களுக்கு மால்வேர்கள் தான் நுழைவு சீட்டாக இருக்கின்றன.


பொதுவாக விண்டோஸ் சார்ந்த கம்ப்யூட்டர்களுக்கு வேட்டு வைத்டு வந்த இந்த வில்லங்கமான சாப்ட்வேர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை பதம் பார்த்து வருவது தான் கவலை தரும் விஷயம்.குறிப்பாக ஆன்ராய்டு போன்களை மால்வேர்கள் அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.ஸ்மார்ட் போன் சார்ந்த பயன்பாட்டை மேம்படுத்த கைகொடுக்கும் அப் எனப்படும் செயலிகள் வழியாக மால்வேர்கள் உள்ளே நுழைந்து விடுவதாக கருதப்படுகிறது. 


எனவே நீங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருந்தால் மால்வேர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாம் சரி, உங்கள் போனில் மால்வேட்ர் குடிகொண்டிருக்கிறதா என எப்படி கண்டு பிடிப்பது? மால்வேர்களின் ஸ்டைலே உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போனுக்குள் நுழைந்து விடுவதாக இருக்கின்றன.எனவே அவை போனில் தங்கள் வேலை காட்டத்துவங்கும் போது தான் அவற்றை கண்டுபிடிக்க முடியும்.


ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே மால்வேர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொண்டு விடலாம். உதாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வழக்கத்துக்கு அதிகமான தகவல்கள் (டேட்டா) பயன்படுத்தப்படுகின்றன என்றால் அது மால்வேரின் வேலையாக இருக்கலாம். பெரும்பாலான மால்வேர்கள் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவே உருவாக்கப்படுவதால் அவை போனின் பின்னணியில் இருந்து தகவலகளை திரட்டிக்கொண்டே இருக்கும்.எனவே உங்கள் போனில் இருந்து தகவல் பயன்பாடு அதிகரித்தால் மால்வேர் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.


அதே போல் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்பாடு ஸ்மார்ட்டாக‌ இல்லாமல் போவதும் கூட மால்வேர் வேலையாக இருக்கலாம்.எனவே திடிரென காரணமே இல்லாமல் உங்கள் போன் செயல்பாடு மந்தமானாலோ அல்லது ஒவ்வொரு செயலுக்கும் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டால் மால்வேர் பிரச்ச்னையாக இருக்கலாம்.
போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதும் அழைப்புகளை சரியாக பேச முடியாமல் போவதும் கூட மால்வேரின் காரணமாக இருக்கலாம்.


ஆக உங்கள்  போனின் செயல்பாடு பிரச்சனைக்குறியதாக இருந்தால் மால்வேர் பாதிப்பாக இருக்கலாம் என யூகித்து கொள்ளலாம். சரி, மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்ததாக அவற்றை நிக்குவது எப்படி? இது குறித்து கவலையே வேண்டாம். காரணம் மால்வேர்களை நீக்குவதற்கான செயலிகள் இருக்கின்றன.


 இந்த செயலிகளை கூகுல் ஸ்டோரிலேயே டவுண்லோடு செய்யலாம். 360 மொபைல் செக்யீரிட்டு, அவாஸ்ட் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.நார்ட்டன்,காஸ்பர்ஸ்கி போன்ற பிரப‌ல வைரஸ் தடுப்பு சேவை நிறுவங்களும் இத்தகைய செயலிகளை வழங்குகின்றன.
ஆனால் மால்வேர்களை அப்புறப்படுவத்துவதை காட்டிலும் அவற்றை உள்ளே விடாமல் இருப்பது சிறந்த வழி. இதற்கும் மால்வேர்கள் போனுக்குள் எட்டிப்பார்க்க வழியில்லாமல் செய்ய வேண்டும். 

மால்வேர்களுக்கு செயலிகள் தான் வாகனம். கூகுல் பிலே ஸ்டோர் செயலிகளை அலசிப்பார்த்தே அனுமதித்தாலும் வில்லங்கமான செயலிகள் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகின்றன.எனவே செயலிகளை டவுண்லோடு செய்யும் முன் நீங்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
புதிய செயலிகளை தேடிப்பார்த்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த ஒரு செயலியையும் டவுண்லோடு செய்யும் முன் அவை ஆபத்தில்லாதவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு எளிய வழி செயலி பற்றி மற்ற பயனாளிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை படித்து பாருங்கள். அந்த செயலி பிரச்ச‌னைக்குறியது என்றால் பயனாளிகள் அவை பற்றி குறிப்பிட்டிருக்கலாம். 


அடுத்ததாக செயலியை உருவாக்கிய சாப்ட்வேர் நிபுணர் அல்லது சாப்ட்வேர் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவரது அல்லது அந்நிறுவனத்தின் பிற செயலிகள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மூலமே அவை நம்பகமானவையா என தெரிந்து கொள்ளலாம்.


மற்ற இடங்களில் இருந்து செயலிகளை டவுண்லோடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.சில செயலிகள் சூப்பர் யூசர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டும் . இவை கூட சில நேரங்களின் மால்வேருக்கான வழியாகிவிடலாம்.


எல்லாவற்றுக்கும் மேல் கம்ப்யூட்டரில் வைரஸ் ஸ்கேன் செய்வது போல ஸ்மார்ட்ட் போனிலும் அடிக்கடி வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

Sunday 27 October 2013

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.

http _www.coolphototransfer.com_ 


கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.


இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.


அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.
இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது.


உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.
இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.



டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்

26 - tec SweetHome3D

இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.

கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.

மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.

லிங்க் ::http://www.sweethome3d.com/index.jsp

Wednesday 9 October 2013

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். 



மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

 

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

Monday 7 October 2013

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்!





ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: 


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல் பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.


டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுகக்வும். இங்கு தரப்படும் பல டேப்களில், "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start' என்பதனைத் தேடிக் காணவும். இந்த செட்டிங் மீது ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். இனி, உங்கள் விண்டோஸ் 8.1 கம்ப்யூட்டர், ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது. இந்த வசதி, ஸ்டார்ட் ஸ்கிரீன் தொடக்கத்தினைப் பார்த்து தயங்குவோருக்கு அருமருந்தாக அமையும். விண்டோஸ் 8.1 வரும் அக்டோபர் 17 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அப்போது புதிய சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், இந்த செட்டிங் அமைத்துக் கொள்ளலாம்.


புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: 


நம் கம்ப்யூட்டர்களில், இணையம் தேட பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்க்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து இணையத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கிடைக்கும் லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.


இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.


இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது. இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 


முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். இதற்கு Win key + C ஆகிய கீகளை அழுத்தலாம். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change PC Settings என்பதில் தட்டவும். Search and Apps என்பதில் கிளிக் செய்திடவும். Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடலாம். 


எடுத்துக்காட்டாக, மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம். இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம். விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்கலாம். முன்பு போல, கண்ட்ரோல் பேனல் திறந்து இவற்றை அமைக்க வேண்டியதில்லை.


Click Here

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top