.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

திருடவேண்டிய டாப் 10 சீனா படங்கள்!




ம்ஹும். அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். உலக நாடுகளின் மக்கள் தொகையில் எப்படி சீனா நம்பர் ஒன்னோ அதே போல் திரைத்துறையில் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சீனப் படங்களுக்கே உலகளவில் மார்க்கெட் இருக்கிறது. சீனா என்றால் வெறும் சீனா மட்டு
மல்ல, ஹாங்காங்கையும் சேர்த்து தான்.

இந்தப் படங்கள் நமக்கு புதியதும் அல்ல. இன்று சன் டி.வி. நீங்கலாக மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ஹாலிவுட்(!) டப்பிங் படங்கள், சீனப் படங்கள்தான். ஆக்ஷன்தான் இந்தப் படங்களின் அடிநாதம். குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸை இவர்கள் அளவுக்கு படங்களிலும், காட்சிகளிலும் பயன்படுத்துபவர்கள் வேறு யாருமே அல்ல. அதனால்தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் கூட சீன ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்தே ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்கள்; ஷூட் செய்கிறார்கள்.

ரைட், இந்த ஆண்டு சீனப் படங்கள் எப்படி? ஏனெனில் இந்த வருடம்தான் டாலரின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் டிரவுசர் கழன்றது சீனாவுக்குத்தான். ஏற்றுமதி குறைய, இறக்குமதி மென்னியைப் பிடிக்க, தொழிலாளர் போராட்டங்கள் முன்னுக்கு வர, சரித்திரம் காணாத அளவுக்கு தற்கொலைகள் அதிகரிக்க, உழைப்பு நேரம் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்களாக அதிகரிக்க...

புறச் சூழல் எந்த வகையிலும் சீனாவுக்கு சாதகமாக இல்லை. ஆனால், திரைத்துறையோ வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு படங்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் டாப் 10 படங்களை பொறுக்கி எடுப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

இந்த ஆண்டு பிப்ரவரி 10 அன்று வெளியான ‘Journey to the West: Conquering the Demons’ சீன இலக்கியத்தின் க்ளாசிக் ஆக அறியப்படும் ‘ஜர்னி டூ த வெஸ்ட்’ நாவலின் பாதிப்பில் உருவான படம்தான். தாவோ - பவுத்த - ஜென் தத்துவத்தில் அமைந்த இந்தப் படத்தை ஒருவகையில் ஆக்ஷன் காமெடி வகையறாவாக கொள்ளலாம். பாக்ஸ் ஆபீஸில் பல ரிக்கார்டுகளை முறியடித்த இந்தப் படத்தின் அடுத்தப் பாகம், விரைவில் தயாராக இருக்கிறது.

இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட ‘ஸோ யங்’, ஒட்டு மொத்த சீனாவையும் வசூலில் குலுக்கியிருக்கிறது. ‘To Our Youth that is Fading Away’ என்ற தலைப்பில் வெளியான நாவலின் திரைவடிவம்தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பாதிப்பையும், கதையையும், காட்சிகளையும் நிச்சயம் அடுத்த ஆண்டு இந்தியில் வெளியாகவிருக்கும் ஏதேனும் ஒரு படத்தில் பார்க்கலாம். அந்தளவுக்கு வலுவான, நெகிழ்ச்சியான சப்ஜெக்ட்.

2010ல் வெளியான படத்தின் முந்தைய பாகமாக வெளியான ‘Young Detective Dee: Rise of the Sea Dragon’, க்ரைம் - ஆக்ஷன் ஜானரில் புதிய சகாப்தத்தை படைத்திருக்கிறது.

டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பாராட்டுப் பெற்ற ‘American Dreams in China’, உள்நாட்டிலும் கல்லாவை நிரப்பியிருக்கிறது. அமெரிக்க - சீன உறவின் ஓர் அங்கத்தை - மறுபக்கத்தை இந்தப் படம் ஓரளவு வெளிச்சமிட்டு காண்பித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள சகல மொழிகளிலும் எத்தனை முறை கொத்து பரோட்டா போடப்படப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், ‘Finding Mr. Right’. ரொமான்ஸ் காமெடி படம். சொல்லி அடிக்கும் கில்லி. முந்திக் கொள்பவர்கள் 2014ல் இந்தியாவில் மெகா ஹிட் பட இயக்குநராக கொண்டாடப்படுவார்!

ஒருவகையில் முந்தைய பத்திக்கு சொல்லப்பட்டதேதான் ‘Tiny Times’ படத்துக்கும் பொருந்தும். இதுவும் ரொமான்ஸ் காமெடி படம்தான். இதே பெயரில் வெளியாகி பெஸ்ட் செல்லர் பட்டியலில் இணைந்த நாவலின் திரைவடிவம்தான். காதல், நட்பு, உறவு ஆகிய வற்றை சுற்றி பிணைக்கப்பட்ட படம். விமர்சகர்கள் காறி துப்பிவிட்டார்கள். ஆனால், ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். உலகம் முழுக்கவே ரசிகர்களிடமிருந்து சற்றுத் தள்ளித்தான் விமர்சகர்கள் இருக்கிறார்கள் போல. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் - அதாவது, நாவலின் செகண்ட் ஆஃப் - ஆண்டு இறுதியில் வெளியாகியிருக்கிறது. ஸோ, டி.வி.டி. தேடி படம் பார்க்க நினைப்பவர்கள் இரு பாகங்க ளையும் கேட்டு வாங்கி பார்ப்பது நல்லது. ஏனெனில் இரண்டுமே மெகா ஹிட் படங்கள்.

ஆக்ஷன் பட ஜானரில் அதிரிபுதிரியாக ஜெயித்தப் படம், ‘Switch’. பாரம்பரியமிக்க ஓவியத்தை ஒரு பிசினஸ்மேன் ஆள் வைத்து திருடுகிறார். கள்ள மார்க்கெட்டில் அதை அதிக தொகைக்கு விற்கிறார். விற்கப்பட்ட ஓவியத்தை கைப்பற்றி எப்படி மீண்டும் மியூசியத்தில் வைக்கிறார்கள் என்பதுதான் படம்.

‘த ஒன் டிடெக்டிவ்’ என்ற பெயரில் பூஜை போடப்பட்டு ‘Badges of Fury’ என்ற பெயரில் வெளியான ஆக்ஷன் காமெடி படம், சீனாவில் வெற்றிப் பெற்றிருப்பது நமக்கு ரொம்பவே முக்கியம். ஏனெனில் தமிழில் பல விதங்களில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் ‘ஓஷன் ஹெவன்’ படத்தின் இயக்குநர்தான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

லட்டு இல்லாமல் திருப்பதியா, பஞ்சாமிர்தம் இல்லாமல் பழநியா என்பது போல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் இல்லாமல் டாப் 10 சீனப் படங்கள் எப்படி நிறைவு பெறும்?

இருக்கிறது. இந்த ஆண்டுக்கும் ஒரு கோட்டாவை எடுத்து பிரபஞ்சத்தின் முன்பு சமர்ப்பித்திருக்கிறார்கள். அதுதான்,‘The Grandmaster’. பெர்லின் ஃபிலிம் ஃபெஸ்டிவல் உட்பட பல விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிய இந்தப் படம், கமர்ஷியலாகவும் க்ராண்ட் சக்சஸ்.

மொத்தத்தில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் சீனப் படங்களில் பெரிய வித்தியாசமில்லை. அதே களன். அதே கதைகள். அதே வசூல்கள்.

விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு!




ஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார்.


டி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும்.


இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளில் நேரடியாக ஜில்லா ஆடியோ விற்பனைக்கு வரவுள்ளது.


 இதற்கிடையில் இப்படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைத்து அதில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து 40 ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதிய ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது.


இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

மசால் தோசை - சமையல்!






தேவையானவை:


தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.


துவையலுக்கு:


தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:


 ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.


துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்!




உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.
கால்சியம்

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள்கள்

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

வால்நட்

வால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

இஞ்சி

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

மிளகு

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

தண்ணீர்

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

முட்டை
முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.

தடைகளே ஓடி வா!




1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?

2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .


3.நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த கால கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும் .வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பது நம் அணைவருக்கும் தெரியும் .அந்த அனுபவங்களில் எஞ்சி இருப்பது நாம் போராடிய காலங்கள் தான்.சரி இந்த அனுபங்களை எப்படி பெறுவது?தடைகளை எப்படி எதிர் நோக்குவது.

4.நாம் தடைகள் என்று எதை நினைக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி புதையல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும் ,ஏன் என்றால் இது தான் உறுதியான பிரபஞ்சவிதி.தடைகள் ஒரு விசயத்தில் இருக்கின்றது என்றால் ,தடைகளுக்கு அப்பால் உள்ள வெற்றி புதயலை அடைய நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முதல் பாடம்.சரி தகுதி என்றால் என்ன ?தடைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது தான் முதல் தகுதி,நாம் தடைகளை கண்டு அஞ்சுவதோ,அதனிடம் இருந்து ஓடி விடுவதோ கூடாது.

5.தைரியமாக தடைகளை அது எப்படி இருந்தாலும் ,நம்மிடம் அதனை எதிர் கொள்ளும் தகுதி இல்லாவிட்டாலும் கூட நாம் எதி கொள்ள கொள்ள அந்த தடைகள் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் அந்த ரகசிய வழிகளை நமக்கு உணர்த்தியேதீரும் .எந்த விசயத்திலும் தோல்வியடைந்தவர்கள் தடைகள் உணர்த்தும் பாடங்களை அறியும் முன்பே அதனை விட்டு வெளியேறி விட்டவர்கள்தான்.

6.ஒருவர் நினைக்கிறார் எனக்கு என் வாழ்வில் எந்த தடைகளும் இல்லை என்றால் ,இது தவறு உடனே நீங்கள் உங்களால் முடிந்த வரை நீங்களாகவே சவாலான சூழ்நிலைகள் என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள் ,அவைகளை எதிர் கொள்ளுங்கள் வாழ்க்கையை வாழுங்கள் ,இல்லையென்றால் உங்களுக்கு நினைத்துப் பார்க்க கடைசி காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top