.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 20 September 2013

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்!


சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.




பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.



இணையதள முகவரி : http://easybartricks.com


இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி
செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர்
இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ
அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம்.
Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks
Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும்
தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ்
பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.


உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.





நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.
04.03.1981= 0+4+0+3+1+9+8+1
=26 (2+6)
=8
8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
அதன் படி....
1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!


 
 
ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
 

'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...
 
 
எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....
 

சில நாட்கள் கழிந்தன....
 

மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
 

புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..
 
 
தென்னையோ புயலை எதிர்த்தது..
 

தென்னை வேரோடு சாய்ந்தது....

நாணல் எந்த சேதமும் அடையவில்லை....
 

நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.
 
 

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!



 Ear pain is a common thing for everyone to adult children.
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது. 


இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும். 



தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும். 



சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும். 

பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!



 If you have toothache, it is better to seek immediate advice from a dentist before the problem becomes worse.

உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம்.


கிராம்பு

பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆகவே இது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய பண்புகளை பெற்றுள்ளதால் கிராம்பை பல்வலிக்கு பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்தலாம்: கிராம்பு எண்ணெய்யை ஒரு காட்டன் துணி கொண்டு நனைத்து பல் வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல் வலி குணம் பெறும். பல் வலியால் அவதி படுபவர்கள் அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை ஒரு சில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் முழு கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல் வலி தீரும்.

பூண்டு

பூண்டை பயன்படுத்தினாலும் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.பூண்டு ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிறமருத்துவ குணங்களைகொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பில் உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது..

எப்படி பயன்படுத்தலாம்: வெறுமனே பூண்டையும், கிராம்பையும் சேர்த்து நசுக்கி சில துளிகள் உப்பு சேர்த்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி குணம் பெறும். மேலும் பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிச்சையாகும்.

கோதுமை புல் செடி(wheatgrass)

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு செயல்படுவது கோதுமை புல். இது பல்வலிக்கு தீர்வு தர தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிற-து. கோதுமைபுல் பல் வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் தீர்வு வழங்குகிறது.

எப்படி பயன்படுத்தலாம்: கோதுமைபுல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய் தொற்றை கட்டுபாட்டின் கீழ் வைத்துக்கொள்கிறது. மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பல் வலியை குணப்படுத்தக்கூடிய கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல் வலி வரப்போகிறது என அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். உங்களால் மெல்ல முடியவில்லையெனில் வெங்காயத்தை பசை போல அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளும் பல் வலியை தீர்க்கும். பாதிக்கப்பட்ட பல் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு வலி வரப்போவது என அறிந்ததும் ப்ரெஷ்சான ஒன்று இரண்டு கொய்யா இலைகளை வாயில் விட்டு மென்று விடலாம். மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பானதும் சில துளி உப்பு சேர்த்து வாய்களை சுத்தம் செய்யலாம். கொய்யா இலைகள் இல்லையெனில் பச்சை கீரைகளை பயன்படுத்தலாம். இவை இரண்டுமே பல் வலியை குணப்படுத்தும் சிறந்த மருந்து.

மிளகு மற்றும் உப்பு

மிளகு கலந்த உப்பு கூட வீட்டில் பல் வலியை கையாள சிறந்த மருந்தாகும். இது பல் வலிக்கு பயன் பெறக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாட்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.மேலும் பல் வலியை போக்க பெருங்காயம், ஐஸ் கியூப், பே பெர்ரி, சூடான உப்பு நீர் ஆகியவற்றைக் கொண்டும் பல்வலியை போக்கிகொள்ளலாம். 


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top