.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 23 October 2013

நோக்கியா Lumia 1520 முக்கிய அம்சங்கள்!


நோக்கியா Lumia 1520, 6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது. டூயல் LED ஃபிளாஷ் உடன் 20-மெகாபிக்சல் PureView கேமரா கொண்டுள்ளது. Lumia 1520 ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்க மற்றும் Q4 2013 ஐரோப்பிய சந்தைகளில் முதலில் கிடைக்கும் என்றும், இந்த ஆண்டுக்கு பின்னர் மற்ற சந்தைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்பார்த்தபடி, Lumia 1520 அம்சங்கள் மூன்றாவது விண்டோஸ் தொலைபேசி மேம்படுத்தல் கொண்டு புதிய வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 8 ஆம்பர் மேம்படுத்தலில் இயங்குகிறது. மேலும் Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர், மற்றும் 2GB ரேம் கொண்டுள்ளது. built-in வயர்லெஸ் சார்ஜ் ஃபன்ஷனாலிட்டி கொண்ட 3400mAh பேட்டரி கொண்டுள்ளது. Lumia 1520 முன் எதிர்கொள்ளும் 2 மெகாபிக்சல் HD கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசி மூன்று வண்ணங்களில் கருப்பு, சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் வரும். நோக்கியா Lumia 1520 கருப்பு வண்ண வகை மறுசுழற்சி பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய Lumia 1520 மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் மற்றும் 7GB கொண்ட Skydrive cloud சேமிப்பு இடம் ஏற்றப்பட்டு வருகிறது. 32 மற்றும் 64GB சேமிப்பு விருப்பங்கள், மற்றும் NFC உடன் வருகிறது.

நோக்கியா Lumia 1520 முக்கிய குறிப்புகள்

6 இன்ச் முழு HD (1080x1920) LCD டிஸ்ப்ளே


Quad-core 2.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 

ப்ராசசர்

ரேம் 2GB


20-மெகாபிக்சல் PureView கேமரா


விண்டோஸ் போன் 8


NFC 


3400mAh பேட்டரி

நோக்கியாவின் Lumia 2520 டேப்லெட் அம்சங்கள்!



நோக்கியா நிறுவனம் Lumia 2520 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Lumia 2520, 10.1-இன்ச் முழு HD திரை மற்றும் 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது $ 499 விலையில் வருகிறது மேலும், டேப்லெட் 3G இணைப்புடன் வருகிறது.


Lumia 2520 பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில் முதலில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வெளியிடுவதைப் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இந்த டேப்லெட் இப்போது விண்டோஸ் RT  மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.



Lumia 2520 டேப்லெட் முக்கிய அம்சங்கள் ஆகும்:



1920 x 1080 தீர்மானம், 10.1-இன்ச் முழு HD திரை கொண்டுள்ளது.


பிக்சல் அடர்த்தி 281 ppi உள்ளது.


6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா


2 மெகாபிக்சல் முன் கேமரா


குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 Quad-core 2.2 GHz ப்ராசசர்,


2 ஜிபி ரேம்,


அதிகபட்சமாக 25 நாட்கள் காத்திருப்பு நேரம் உள்ளது


MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடியது,


USB 3.0 ஸ்லாட்,


ப்ளூடூத் 4.0,


WiFi


பகிர்வுக்காக NFC.


4G இணைப்பு


2 USB போர்ட்கள்.


விண்டோஸ் RT  மற்றும் விண்டோஸ் 8 இயங்குகிறது.

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்



• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு
அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும்.
இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும்
பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும்
சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில்
தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில்
இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால்
சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர்
இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும்
வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க
இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி..?



வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

வாஷிங்மெஷினில் அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வாஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்க வேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்து விடும். வாஷிங்மெஷினில் துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஆப் செய்துவிடவும்.

வாஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும் போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளேதோ அத்தனை சுற்றுகள் தான் சுற்றவேண்டும்.

வாஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மை துடைக்க வேண்டும்..ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.

தாலி கட்டுவது ஏன்?

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top