.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 21 August 2013

வியத்தகு அறிவியல் செய்திகள்!

வியத்தகு அறிவியல் செய்திகள்

நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.

மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது


யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. ஆனால் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. இதனால் தான், மிகப் பெரிய பொருட்களைக் கூட யானையால் தூக்கி எறிய முடிகிறது.

ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.

மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.

முதல் உலகப்போரின் போது, தென்ஆப்பிரிக்க ராணுவத்தில் ஜாக்கி என்ற பபூன் குரங்கு உளவாளியாக செயல்பட்டது.

பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகளின் போது சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாணயங்களில் புத்தரின் உருவத்தைப் பொறித்த முதல் மன்னர், கனிஷ்கர்.

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு முதன் முதலில் புகையிலையை அறிமுகம் செய்தவர்கள், போர்த்துக்கீசியர்கள்

இந்தியாவில் அஞ்சல் வழி கல்வித் திட்டத்தைத் துவக்கிய முதல் பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம்.

காந்தியை 'மகாத்மா' என முதன்முதலாக அழைத்து பெருமைப்படுத்தியவர், ரவீந்தரநாத் தாகூர்.

18 வயது நிரம்பியபோது, இங்கிலாந்து ராணி பிரிட்டிஷ் ராணுவத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார்.

பண்டைய எகிப்தில் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிகள் இறந்தால் மருத்துவரின் கைகள் வெட்டப்படும்.

பண்டைய ரோம் அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூர்மையான மூக்குடன் பிறக்கும் ஆண், தலைமைப் பதவியில் அமர்த்தப்படுவார்.

அனைத்தும் போலார் கரடிகளும் இடது கை பழக்கம் கொண்டவை.

ஐஸ்லாந்து நாட்டுல் ரயில் போக்குவரத்து கிடையாது.

தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.

பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.

பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே. வாட்டர்மேன்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.

சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).

மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.
 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top