.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!




தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் புண்படச் செய்துள்ளது. இந்த போஸ்டரை அச்சடித்தவர், ஒட்டியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதில் ஐந்து பேரின் பெயர்கள் உள்ளன.


ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குளிர் கால எச்சரிக்கைகள்!




கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன் உடல் பளபளப்பும் ஏற்படும்.


மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.


இதற்கிடையில் இதே குளிர் காலத்தில்தான் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை மருத்துவமனை ரிகார்டுகள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.


மாற்றங்களுக்கான காரணங்கள்:


குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,தட்டை அணுக்கள், பைபர் நோஜன் அதிகரிக்கிறது .கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால்,அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது.


இதனால்தான் நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதிலும் ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை இது போன்ற காலங்களில் மிகவும் கஷ்டம். எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.


முக்கியமாக மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.


சமவெளிகளில்கூட மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபட ப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப்பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ஏசியை அணைத்து வைக்க வேண்டும்.

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!




எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.


இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.


இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.


இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ராதா மகள்  கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.


இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் , ஒரு ஹீரோயின் தானாம். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார், கார்த்திகா.


ஆர்யா, விஜய் சேதுபதி இருவருடனும் ஒரு டூயட் பாடலாவது இருக்கும் என்பதால்,  அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கைப்பற்றிவிடலாம் என்று நம்வுகிறாராம் கார்த்திகா.


தற்போது அருண்விஜய்யுடன் 'டீல்' படத்தில் கார்த்திகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப் படிங்க மொதல்ல!




‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட் களை எடுக்கும் நிறுவனங்கள் 45 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பும் 20 லட்ச ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டும். குறைந்தது 500 சதுர அடியில் சகல வசதிகளுடன் அலுவலகம் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும். இந்த லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதற்குள்ளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பலாம்.

ஆள் பிடிப்பது குற்றம் 

லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து ஆட்களை இன்டர்வியூவுக்கு அழைக்க லாம். துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தோ, லோக்கல் சேனல்களில் விளம்பரம் செய்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம். லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தவிர மற்றவர்கள் தனிநபர்களின் பாஸ்போர்ட் களை வாங்கி வைத்திருப்பதே கைதுக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் வெளி நாட்டுக் கம்பெனியானது பணியாளருக் க்கான குறைந்தபட்ச ஊதியம், விசா, தங்கு மிடம், உணவு, மருத்துவம், போக்கு வரத்து வசதி உள்ளிட்டவைகளை இலவச மாக அளிப்பதுடன், பணியாளர் இறக்க நேரிட்டால் பிரேதத்தை தங்கள் செலவி லேயே இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக வும் உத்தரவாதம் தரவேண்டும்.

வங்கி உத்தரவாதம் 


எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இந்திய பணியாளருக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வெளி நாட்டுக் கம்பெனியிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு இங்கி ருந்து ஆட்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்துடையது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை வைத்து அரசே சம்பந்தப்பட்ட பணியாளருக்கு இழப் பீட்டை வழங்கிவிடும்.

போலிகளை தண்டிக்க முடியும் 

“நிறுவனங்கள் மூலமாக இல்லாமல், சுயமுயற்சியில் வெளிநாட்டு வேலை களுக்கு போகும் நபர்களுக்கு தினமும் நாங்களே இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறோம்’’ என்கிறார்கள் பி.ஓ.இ. அலுவலக அதிகாரிகள். “அதெல்லாம் சரி.. ஊர் ஊருக்கு பெட்டிக் கடை போட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லும் மோசடிக் கம்பெனிகளை தடுக்க முடியாதா?’’ என்று கேட்டால், “தமிழகத்தில் முறைப்படி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் 104 மட்டுமே. மற்ற வைகள் எல்லாமே போலிகள் தான். போலிகள் மீது நட வடிக்கை எடுக்க முடியும். ஆனால், எங்களி டம் அதற்கான மேன் பவர் இல்லை; போலீஸைத்தான் நம்ப வேண்டி இருக்கி றது. இதற்கு ஒரே வழி மக்கள் விழிப்புடன் இருப்பது தான்’’ என்கிறார்கள்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?




இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அந்த சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சஸ்பெண்ட் செய்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி), இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்தது.

ஐஓஏ மீதான தற்காலிக முடக்கத்தை நீக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகள் இன்னும் தகர்ந்தபாடில்லை. இதற்கு யார் காரணம் என்றால், அது ஐஓஏதான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஐஓசி.

நல்ல விஷயம்தானே அப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் என்ன பிரச்சினை என தோன்றலாம். ஆனால், அப்படியொரு திருத்தம் கொண்டு வரப்பட்டால் இந்திய விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாக இருக்கும் பெரும்பாலான பெரிய மனிதர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அந்தத் திருத்தத்தை செய்யாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள்.

ஐஓசி எச்சரிக்கை 

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு ஐஓசிக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐஓஏவின் நீதி நெறிக்குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை உடனடியாக நிராகரித்த ஐஓசி, தாங்கள் கூறியபடி சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால் ஐஓஏவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அப்போதே ஐஓஏ தேர்தல் தேதியும் (பிப்ரவரி 9) அறிவிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் பனோட் மற்றும் அபய் சிங் சௌதாலா ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது “இந்திய வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐஓஏ தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான அபய் சிங் சௌதாலாவும், பொதுச் செயலரான லலித் பனோட்டும் தியாகிகளாகப் பேசிக் கொண்டார்கள். ஐஓசியின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வழியின்றிதான் இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்களே தவிர, விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

குளிர்கால ஒலிம்பிக் 

இதனிடையே ஐஓஏவின் சட்டத்திருத்தத்தால் மகிழ்ச்சியடைந்த ஐஓசி தலைவர் தாமஸ் பேச், “ரஷியாவின் சோச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ்தான் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அதற்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெற்றுவிட்டால், அதன் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படுவதோடு, இந்தியர்கள் அவர்களின் தாய் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.

பிப்ரவரி 9-க்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெறும் பட்சத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டுவிடும் என எதிர்பா்க்கப்பட்ட நிலையில் அடுத்த பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி சட்டத்திருத்தம் செய்யப்பட்டதில் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது ஐஓசி. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக ஐஓஏவின் நீதி நெறிக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதுதான் அந்த ஓட்டை. இந்த ஓட்டை தெரியாமல் விழுந்ததல்ல, ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் நுழைவதற்காக திட்டமிட்டு போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

தடை நீக்கப்படாது 

இதனால் கோபமடைந்துள்ள ஐஓசி, உங்களின் சட்டத்திருத்தம் முழு மகிழ்ச்சியளிக்கவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் முழுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியொரு திருத்தம் கொண்டு வராத வரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படாது என எச்சரித்திருக்கிறது.

சட்டத்திருத்தத்தில் தேவையில்லாத ஊகங்களையும், சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள ஐஓசி, “ஐஓஏ நிர்வாகியாக இருக்கும் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அவர் தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளிக்கும் வரையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐஓஏவுக்குள் நுழைய முடியாது. ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவோ ஐஓஏ நீதி நெறிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது” என தெளிவாகக் கூறியிருக்கிறது.

சிலர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டபோதும் கூட அங்கிருந்து வெளி யேற அவர்களுக்கு மனமில்லை. தங்களின் பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதோடு, பல்வேறு வெளிநாடுகளையும் இலவசமாக சுற்றிப்பார்த்து விட்டனர். ஒருவேளை அவர்கள் பதவியில் இருந்து விலகினாலும், தங்களின் பிள்ளைகளையோ, பினாமிகளையோதான் அந்தப் பதவியில் அமர்த்த வழி பார்ப்பார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுத் துறைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு, இந்தத் திட்டத்துக்கு இத்தனைக் கோடி ஒதுக்கியிருக்கிறோம் என்று விளம்பரப் படுத்துவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. கடந்த காலங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்தவும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள்கூட ஊழல்பேர் வழிகளின் நெருக்கடியால் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

தாய் நாட்டுக் கொடி 

இந்திய அரசு செய்யாத நல்ல காரியத்தை இப்போது ஐஓசி செய்திருக்கிருக்கிறது. ஐஓசியின் பிடி இறுகியதால் ஐஓஏவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது. ஊழல்பேர்வழிகளை வெளியேற்றி நேர்மையானவர்களையும், முன்னாள் விளையாட்டு வீரர்களையும் ஐஓஏவுக்கு நிர்வாகிகளாக் கொண்டு வரவேண்டும். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் தேசியக் கொடியுடன் சர்வதேசப் போட்டிகளில் தலைநிமிர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது.

விளையாட்டுத் துறையில் ஊழல்பேர்வழிகள் இல்லாத நிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்திருந்தால் காமன்வெல்த் ஊழல் என்ற கறை இந்தியாவின் மீது படிந்திருக்காது. இந்தியாவுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top