தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் அஜீத் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்களின் ஆர்வத்தால் சில பாதிப்புகள் வந்தாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனை அடுத்து ‘வீரம்’ படப்பிடிப்பில் இருக்கும் அஜீத் தனது உதவியாளர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி பின்வருமாரு: திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில திரையரங்கில் ரசிகர்கள் சேதப்படுத்துவதாக வந்த செய்தி என்னை கவலை அடைய செய்துள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்தவோ, இல்லை அவர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.
தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷத்துடனும்,பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்.
தமிழ் மக்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் அஜீத்.
 Posted in:  சினிமா விமர்சனம்..!
Email This
BlogThis!
Share to X
Share to Facebook



07:57
ram
