.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 December 2013

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???



1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன்
 குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

உண்மையான ஆணழகன்..


கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது. உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம். அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன்..

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top