கதை சொல்ல நச்சரித்தது
 
குழந்தை.
 
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
 
அனைவரும் உறங்கிவிட்ட
 
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
 
துரத்தி ஓடிவந்தன என்று
 
தொடங்கினேன்.
 
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
 
பின்னெப்படி ஓடிவரும் என்றது
 
குழந்தை.
 
உறங்கிவிட்ட பாவனையில்
 
கண்மூடிக்கிடந்தேன் நான்.



21:16
ram