.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

இரவில் பேய்கள் என்னைமட்டும் துரத்தி ஓடிவந்தன!

கதை சொல்ல நச்சரித்தது
 
குழந்தை.
 
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
 
அனைவரும் உறங்கிவிட்ட
 
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
 
துரத்தி ஓடிவந்தன என்று
 
தொடங்கினேன்.
 
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
 
பின்னெப்படி ஓடிவரும் என்றது
 
குழந்தை.
 
உறங்கிவிட்ட பாவனையில்
 
கண்மூடிக்கிடந்தேன் நான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top