.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

குழந்தை!


அப்பாவும் அம்மாவும்
 
தராத அரவணைப்பை
 
பொம்மைக்கு தந்தபடி
 
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
 
கனவில் தோன்றிய கடவுள்கள்
 
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
 
வரமாய் கேட்டனர்.
 
வரிசையில் நின்றிருந்த
 
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
 
தந்துவிட்டு பொம்மையை
 
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
 
பொம்மையாதலின் வழிமுறைகள்
 
அறியாமல் விழித்தபடிநின்றனர்
 
கடவுள்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top