.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 15 November 2013

சிகரட்கவி - கவிதை!

 சிகரட்கவி


கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!. ".

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top