.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 25 October 2013

நான் ஈ இயக்குனரின் ‘மகாபலி’



ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன்.
இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.


இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, கதாநாயகன் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர். தெலுங்கின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரகாஷ் எடிட்டிங் செய்யும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை ஹாலிவுட் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.


ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. 'ரத்த சரித்திரா' படத்தினைத் போன்று ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் இப்போதே முடித்துவிட முனைப்புடன் செயல்படுகிறாராம் ராஜமெளலி. இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘பாஹுபாலி’ என்றும் தமிழில் ‘மகாபலி’ என்றும் பெயர் வைத்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் ராம் லீலா!



மொராக்கோவின் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைக்கிறது ‘ராம் லீலா’.


ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13வது மராக்கெஷ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவில் இருந்து பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச திரைப்பட விழா இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில், விழாவின் தொடக்கமாக ராம் லீலா படம் இடம்பெறுகிறது.


இதன்மூலம் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ராம் லீலா பெறுகிறது. திரைப்பட விழாவில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.




ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ராம் லீலா, நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரோமியோ-ஜூடிவயட் காலகத்திய காட்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கும இப்படத்தின் டிரைலர் மற்றும் தீபிகாவின் நடனம் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

'அத்தரின்டிக்கி தாரெடி' ரீமேக்கில் விஜய்!


தெலுங்கில் ஹிட்டான 'அத்தரின்டிக்கி தாரெடி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்தோடு வசூல் சாதனையும் படைத்த படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. இதில் நாயகன், நாயகியாக பவன் கல்யாண், சமந்தா நடித்திருந்திருந்தனர்.

தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்டதாம். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்க உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.

விஜய் தரப்போ காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்புகிறதாம். ஆனால் சித்திக்கோ ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார். இதனால் வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் பல தெலுங்கு ரீமேக் படங்களை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வரிசையில் 'அத்தரின்டிக்கி தாரெடி' படமும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!


ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார்.

தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு ராஜா சொல்லியிருக்கிறாராம்.

மேலும் ஜெயம் ரவி தனது பழைய படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம். இதையடுத்து ஜெயம் ரவி தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைக்க இருக்கிறார்.

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். 

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு நடத்தும் போது, தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும். 

இதை செய்யாததால் 'வீரம்' பட படப்பிடிப்பிற்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top