.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 25 October 2013

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வடிவமைக்கிறார். 

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தெலுங்கு ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்தவர்கள் தங்களது சங்கத்தை சேர்ந்த்வர்களுக்கும் படத்தில் வேலை கொடுக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள். ஆந்திராவில் வேறு மொழி பட படப்பிடிப்பு நடத்தும் போது, தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும். 

இதை செய்யாததால் 'வீரம்' பட படப்பிடிப்பிற்கு எதிராக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஸ்டண்ட் யூனியனையும் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

நிலைமையை கவனித்த சிறுத்தை சிவா ஸ்டண்ட் காட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்துவிட்டாராம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top