.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

துறவி!

தியானத்திற்குப்பின்
 
மூன்று துறவிகளும்
 
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
 
குளித்து முடித்து வெவ்வேறு
 
கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
 
முதல் துறவி சொன்னார் .
 
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
 
இரண்டாம் துறவி ……..
 
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
 
மூன்றாம் துறவி ………..
 
நான் குளித்த கிணற்றில்
 
27தவளைகளும் ,
 
நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .
 
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
 
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டன.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top