.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

** விதைகள் **


கைகட்டிய சேவகனாய்

பவ்யமாய் உள்நுழைந்தது

பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது

விலகலின் திசை நேரெதிரென
 
அறியப்பட்டிருக்கவில்லை அப்போது

இரை விழுங்கி சுருண்டிருக்கும்
 
சர்ப்பமதின் செரித்தல் நிகழ்வென
 
மெதுவாய் நடந்தேறியது
 
வன்மத்தின் வாக்குவாதம்

தென்றலின் தீண்டலை மறுத்துரைத்து
 
உஷ்ணக்காற்றாய் முகம் கிழித்தது
 
முள் தடித்த சொற்கள்

எங்கோ பெய்யும் மழையின் 

ம‌ண்வாசனையிலும்
 
அறுந்து விழும் நூலாம்படையிலும்
 
கருக்கொண்டுவிடும் இன்னமும்
 
விஷச்செடியின் வீரிய‌விதைகளென

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top