.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

பென்சில் நதி!

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
 
நான் எழுதியபோது
 
அருகில் வந்த மகள்
 
வரைந்த நதியைக் காட்டினாள்
 
தாளில் ஓடியது
 
பென்சில் நதி
 
என் கவிதையை
 
அதில் கரைத்துவிட்டு
 
மறுபடி பார்க்க
 
இன்னும் முடியவில்லை
 
எனச் சொல்லியபடியே
 
ஓடிய அவள்
 
கண்களில் மீதி நதி
 
*****************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top