.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

வனம்!

ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் …..
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ …..
என் தியானம்
எப்படிக் கழியும் அமைதியுடன் .

*****

வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை
மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .

*****

வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தன .

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top