.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

கவிதைப்பெண்!

பெண்கள்
 
ஆண்களைவிடக் கவிதைக்கு
 
அதிகம் நெருக்கமானவர்கள்
 
காரணம்
 
பெண்களைப் போலவே
 
கவிதையும் மென்மையானது

பெண்களைப் போலவே
 
கவிதைக்கும் நாணமுண்டு
 
கவிதையும்
 
எதையும் மறைத்தே சொல்கிறது

கவிதையைப் போலவே
 
பெண்களும்
 
ஆழமானவர்கள் ;
 
சித்தர் பாடல்களைப்போல்
 
அவர்களைச் சீக்கிரமாகப் புரிந்து
 
கொள்ள முடியாது ;
 
சில புதுக் கவிதைகளைப்போல
 
கொஞ்சம் போராடினால்தான்
 
புரிந்து கொள்ள முடியும்

அளந்து அளந்து
 
பெண்கள் அடியெடுத்து
 
வைப்பது போலவே
 
கவிதையும்
 
அடியெடுத்து வைக்கிறது

பெண்கள் தங்களை
 
அலங்காரம் செய்து கொள்வதைப் போலவே
 
கவிதையும்
 
சொல்லணி, உவமையணிகளால்
 
தன்னை
 
அலங்காரம் செய்து கொள்கிறது

ஆண்களைவிடப் பெண்கள்
 
கவிதைக்கு
 
அதிகம் நெருக்கமானவர்கள்
 
***************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top