.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

எங்கே என் காதலி?

எங்கே என் காதலி?

நிலவுப் பெண்ணை
 காணப் போகும்
 கணத்தை எண்ணி
 வெட்கத்தில் சிவந்த
 வானம் சிறிதே
 எனைச் சிந்திக்க வைக்கிறது.

ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?

நான் எழுதும் காதல்
 வரிகளின் தீவிரத்தைத்
 தாங்கவல்ல பெண்
 பிறக்கவில்லையா?
அல்ல எனது வரிகள்
 எவளுக்கும் ஏற்றதில்லையா?

இதோ
 என்னைப் பற்றிக்
 கூறுகிறேன் கேளுங்கள்…

மணிக்கொரு முறை
 காதலியை அழகென்று
 நான் கூறமாட்டேன்
 நீ இல்லாது எனக்கு
 வாழ்வில்லை என்று
 வழக்காட மாட்டேன்
 என் வெற்றிக்கும் தோல்விக்கும்
 என்றும் நீயே காரணமென
 கூறி எனது 23 வருட
 வெற்றி தோல்விகளை
 பொய்யாக்க மாட்டேன்
 என் பெற்றோரை விட
 அவள் முக்கியமென்று
 அவளிடமோ, இல்லை
 அவளை விட எனது
 பெற்றோரகள் முக்கியமென
 வீட்டிலோ சொல்ல மாட்டேன்
 கணத்திற்கொருமுறை நான் உன்னை
 காதலிக்கிறேன் என்று உண்மையை
 காற்றோடு கலக்க மாட்டேன்
 காதலிக்கிறேன் என்று கூறி விட்டு
 பின்னர் புரிந்து கொள்ளத்
 துணியும் தைரியமும் எனக்கில்லை,
புரிந்து கொண்ட பெண்ணிடம்தான்
 எனது காதலைக் கூறுவேன்.

மேலே சொன்ன சாதாரண
 உணர்வுகளை விட
 உன்னதமான இடம் என்
 உள்ளத்தில் அவளுக்குண்டு

இதற்கெல்லாம் தகுதியானவளை
 இன்றல்லா விட்டாலும்
 என்றாவது எனக்கு
 அறிமுகப் படுத்து.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top