.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!

 ********************

கதிர்காம வேல்முருகா
 காப்பதுமுன் பாரமப்பா
 எம்துயரம் நீக்கிடுவாய் – முருகா
 தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
 இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
 நிலைமை சீராக நிழலும் நிஜமாக
 நிம்மதியை எங்களுக்குத் தா – முருகா
 தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
 இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
 கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
 கண்மலரை திறந்திடப்பா – முருகா
 தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
 சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
 கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
 எமக்கிந்த நிலை முறையோ – முருகா
 தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
 ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
 அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
 பரிந்தெம்மைப் பாரப்பா – முருகா
 தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top